Skip to main content

Posts

Showing posts from April, 2020

தேவதை வரம்..!

எந்தப் பெண்ணும் தேவதையாய்ப் பிறப்பதில்லை.....  தாயுமாய் ஆன தந்தை... அன்பாய் அரவணைக்கும் அண்ணன்... துவளும் வேளை தாங்கும் தம்பி... காதலாய்க் கசியும் கணவன்... நம்பிக்கை நல்கும் நண்பன்...  மதிப்பைப் பெருக்கும் மகன்... இவர்களால்தான் தேவதையாய் உணரப்படுகிறாள்...  பெண்ணை... தேவதையாய்ச் செதுக்கும் சிற்பிகளுக்கு நன்றி..! - உமா

கிருமி போதனை..!

"வயதாகிவிட்டது... அடிக்கடி வந்து செல்..." என்ற அம்மாவிடம் அலுவலக வேலையைக் காரணம் காட்டி, சந்திக்கக் காலம் நீட்டித்ததும்... "ஊருக்கு போகணும்மா... இரண்டு நாள் விடுமுறை தாங்க..." என்ற பணியாளிடம் "முடியவே முடியாது..." என மறுத்ததும்... "அப்பா... நேற்று பள்ளியில்..." என்று ஆரம்பிக்கும் முன்பே "நிறைய வேலை இருக்கு, கிளம்பு..." என்று மகளின் வாயை அடைத்ததும்... "இரவு உணவுக்குக் காய்கறி புலாவ் செய்து தருவீர்களா..?" எனக் கேட்ட மகனை அலுவலக தொடர் வேலையைக் காரணம் காட்டி செய்ய மறுத்து முகம் சுருங்க வைத்ததும்... அக்கம் பக்கத்தாரிடம் பேச பல விஷயங்கள் இருந்தும், நேர மேலாண்மை கருதி முகமன் தவிர்த்ததும்... "காப்பு கட்டியாச்சு... யாரும் வெளியே போகக் கூடாது, உள்ளேயும் வரக்கூடாது..." என்று கிராமத்து பூசாரி கூறியதை எள்ளி நகைத்ததும்... சுத்தம் கருதி "கால்களைக் கழுவி உள்ளே வா..." என்ற பாட்டியைப் பத்தாம் பசலியாய் பரிகசித்ததும்... ஓரிரு நாட்களில் மாறிப்போனது. மாற்றியது அணுவினும் சிறிய ஓர் கிருமி..! ...

சீன தாவோயிசமும் (தாவோ தே ஜிங்) இந்துமத இறை தத்துவங்களும்..! - ஓர் ஒப்பாய்வு

'தாவோ தே ஜிங்'  (TAO TE CHING) என்பது சீன செவ்வியல் மெய்யியல் (தத்துவ) நூலாகும். இந்நூல் 'லாவோ சீ' (லாவோட்சு) என்ற தத்துவ ஞானியால் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. 'டாவோயிசம்' அல்லது 'தாவோயிசம்' என்ற மெய்யியல் கோட்பாட்டிற்கு அடித்தளமான நூல் இது. உலக இலக்கிய தத்துவ நூல்களுள் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட நூலாக இது விளங்குகிறது. தாவோ - வழி தே  - நேர்மைக்கு உந்துதல் ஜிங்  - நூல்  நடைமுறை வாழ்க்கைக்கு வழி காட்டக்கூடிய அருமையான நூல் இது. இந்நூல் கருத்துக்களை மேலோட்டமாகக் காணும்பொழுது பொருள் அற்றதாகவும் மிக இயல்பானதாகவும் தோன்றினாலும் ஆழ்ந்து உணர்ந்து நோக்கும்பொழுது இதில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு கருத்தும் நம்மை மெய்ஞான வழிக்கு அழைத்துச் செல்வதாய் அமைந்துள்ளது. தாவோயிச நெறிமுறைகளாக 'கருணை, அடக்கம், பணிவு' என்பனவும் தாவோயிச சிந்தனைகளாக 'நலம், நீண்ட வாழ்நாள், இயல்புச் செயல்பாடு'  ஆகியவையும் கூறப்பட்டுள்ளன. 'செயல்படாமையின் வேதநூல்'  என்று இது வர்ணிக்கப் பட்டாலும் உற்றுநோக்கும் போது இன்றைய நாகரிக நடைமுறை வாழ்வுக்குப...