Skip to main content

புறநானூறு கூறும் அறம்..!

காலத்தை வென்ற கண்ணோட்டங்களையும் புதுமையான அணுகுமுறைகளையும் கொண்டு வாழ்ந்தவர்கள்  சங்ககால மக்கள். சமூக வாழ்வின் மேம்பாட்டுக்காகவும் மனிதர்களுக்கு அறிவுரை கூறவும் புலவர்கள் பல பாடல்களைப் பாடினர்.மன்னர்கள் தவறு செய்யும்பொழுது தக்க நேரத்தில் அறிவுரை கூறி அவர்களைத் திருத்தும்  பொறுப்பையும் அவர்கள் ஏற்றிருந்தனர்.

பாண்டிய மன்னர் ஒருவரின் அதிகாரிகள் கெடுபிடி செய்து வரி வசூலித்து மக்களைத் துன்புறுத்திக்  கொண்டிருந்தனர். மக்கள் படும் இத்துயரை எடுத்துச் சொல்லும் பொறுப்பைப் பிசிராந்தையார் என்னும் புலவர் ஏற்று மன்னரிடம் சென்று தாம் ஓர் உவமானம் மூலம் அவருக்கு செய்தியை உணர்த்தினார்...அந்த அரிய செய்தி...

காய் நெல்லறுத்துக் கவளங்கொளினே
மாநிறை வில்லுதும் பன்னாட் காகும்
நூறு செறு வாயினுந்த  தமித்துப்புக் குளினே
வாய்புகு வதனினுங்க கால்பெரிது கெடுக்கும்
அறிவுடை வேந்த னெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடு பெரிது நந்தும்
பரிவுதப வெடுக்கும் பிண்ட நச்சின்
யானை புக்க புலம் போலத்
தாலு முண்ணானுலகமுங் கெடுமே (புறநானூறு.184)


விளக்கம்:

காய்ந்த நெல்லைக் கவனமாக அறுத்து சேமித்தால், சிறிய நிலத்தில் விளைந்த நெற்கதிர்கள் என்றாலும் அது ஒரு யானைக்கு பல நாள் உணவாக வரும். யானை நேரடியாக வயலில் புகுந்து உண்ணுமானால் அது நூறு வயல்களாக இருந்தாலும் அதற்கு வயிறு நிரம்பாது; நெல்லும் யானை கால் பட்டு வீணாகும். அதுபோல அரசன் மக்களிடத்து வகையறிந்து மக்களே வரிதரும்படி செய்வானாகில் செல்வம் தழைக்கும். அவ்வாறில்லாமல் அரசன் துன்புறுத்தி வசூலித்தால் மக்களும் வருந்துவர். அரசனின் ஆட்சியும் கெடும்.

தன் பொருள் பொதிந்த பாடல் மூலம் தவறு இழைக்க இருந்த அரசனைப் புலவர்கள், தவறை உணரச் செய்து நல்வழிப்படுத்திய பாங்கு வியப்புக்குரியது...!

Comments

Popular posts from this blog

தாய்மையைப் போற்றுதும்...! தாய்மையைப் போற்றுதும்...!

உதடுகளாலும் நினைவுகளாலும் என்றுமே என்னை ஆசிர்வதிக்கும் அம்மாவுக்கு இறைவன், தான் எல்லோரிடமும் அன்பு செய்யும் பொருட்டு தாயைப் படைத்தான்...!  படைக்கும் பிரமனுக்குச் சமமாகத் தாய் என்பவள் போற்றப்படக் காரணம், பெருவரமான  `தாய்மை`. தாயை மதித்துப் போற்றும் பண்பாலேயே பிறந்த நாட்டைத்  தாய்நாடு எனவும்,உதடுகள் இணைந்து ஒலிக்கும் முதல் மொழியைத் தாய்மொழி எனவும் கூறி பெருமிதம் கொள்கிறோம். சங்ககாலம் முதற் தொட்டு இக்காலம் வரை தாய்மையைப் பாடாத கவி  ஞ ர்களைத் தேடிக் கண்டெடுக்க வேண்டும்...! தாய்மையைப்  பேசவும் எழுதவும் எல்லை என்பதேது? எச்சூழ்நிலையிலும் வெறுக்காது நம்மை ஏற்றுக் கொள்ளும் தன்னலமில்லா அன்புகொண்டவள் அன்னை. ஐ ந்தறிவு கொண்ட உயிரினங்களும் பகுத்தறிவு பெறும்_  ``தாய்மை` என்ற பேறு கொள்ளும்போது...! தாயை இறைவனாகக்  காண்பது பொதுநிலை .அந்த இறைவனையே தாயாய் நினைத்து உள்ளம் உருகுதல் பெருநிலை .கருணையின் வடிவமான இறைவனையே,தாய்மை நிலைக்கு  அழைத்துச்  சென்று அவனையே தாய்மையை உணரச்  செய்வது, அனைத்துக்கும் அப்பாற்பட்ட வேறுநிலை . ...

வாய்க்காலும் பனைமரமும் உணர்த்தும் நட்பு...!

இரு உயிர்களுக்கு இடையே காணப்படும் ஒன்றுபட்ட, ஒத்த உணர்வும் எண்ணங்களும் ' நட்பு ' என்னும் சொல்லுக்குப் பாலமாய் அமைகின்றன. சங்ககால இலக்கிய மாந்தர்களான கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் அதியமான் - ஒளவையார் பாரி - கபிலர் ஆகியோர் அரசர்களுக்கும் புலவர்களுக்கும் இடையேயான மாசற்ற, இழிவற்ற, சுயநலமற்ற  நட்பினைப்  பறை சாற்றுவோராவர். ' ஒருவர்  பொறை இருவர் நட்பு ' எனக் கூறும் நாலடியார் நட்பின் அடிப்படைத் தன்மையாகப் ' பொறுத்தல் ' என்ற பண்பைக் குறிக்கிறது. நட்பு, நட்பாராய்தல், கூடாநட்பு, தீ நட்பு முதலியன பற்றி அறநூல்கள் பலவும் பலவிதமாக விளக்கினாலும், 'நாலடியார் 'கூறும் இவ்விரு பாடல்களும், இன்றைய வாழ்வியலோடு மிகவும் பொருத்தமானதாகவும், உளவியல் தன்மை கொண்டதாகவும் விளங்குகிறது. நாய்க்கால் சிறுவிரல் போல் நன் கணியாராயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்? சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும், செய்வினைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு.  (நாலடியார் 218) நாயின் காலில் இருக்கும் சிறிய விரல்களைப் போல, மிகுந்த நெருக்கம் உடையவராய்ப் பழகும் பலர், ஈயின் காலளவு கூட உதவி செய்யா ...

கல்விக்கு வழிகாட்டும் வள்ளுவம்...!

வெள்ளத்தால் போகாது வெந்தணலால் வேகாது வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது  கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது கள்ளர்கோ மிக அரிது காவலோ மிக எளிது கல்வி என்னும் உள்ளத்தே பொருளிருக்க உலகெலாம் பொருள் தேடி உழல்வதேனோ...!  - விவேக சிந்தாமணி திருக்குறள் என்பது அறநூல்களின் அறிவுச்சுரங்கம். அந்த அறிவுச்சுரங்கத்தில் காணக்கிடக்கும் அதிகாரங்கள் பற்பல. கல்வி,கல்லாமை,கேள்வி,அறிவுடைமை போன்ற அதிகாரங்கள் அனைத்துமே கல்வியின் தொடர்புடையதாய் இருப்பினும் 'கல்வி' என்ற அதிகாரத்தில் கூறப்பட்ட வள்ளுவத்தின் வழிகாட்டலைக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம். இரண்டடி குறள் வெண்பாவால் ஆன திருக்குறளில், அந்தந்த காலத்திற்கேற்ற செய்திகள் வழிகாட்டுதல்கள் ஆகியவை நிரம்பி வழிகின்றன. 'கண்டதைப் படிக்கப் பண்டிதன் ஆவான்' என்ற சொல்வழக்கு ஒன்று உண்டு. 'கண்டு அதைப் படிக்கப் படிக்கப் பண்டிதன் ஆவான்' என்பதே சரி. கண்ட நூல்களை எல்லாம் கற்பதால் பயனில்லை. பாகுபாடு அறிந்து கற்கத் தகுந்த நூல்களைக் கற்பதால் மட்டுமே அறிவு வளர்ச்சி பெறும். இல்லையானால் காலமும் முயற்சியும் வீணாகும். அப்படித் தேர்ந்தெடுத்துப் படிக்கும் நூல்களை...