Skip to main content

மொட்டை மாடி தரும் முழுமை

Motta maadi
அடுக்கக வாழ்வின் இறுக்கத்தைக் 
களைய
இலட்சிய வாழ்வின் நீட்சியாய் 
உதிப்பது
தனிவீடு எனும் பெருங்கனவு.

உட்கார உறங்க
சமைக்க  சுவைக்க 
துதிக்க படிக்க
என
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு  அறை-

வாயிலில் சில மரங்கள்
பல பூச்செடிகள்

என்றிருக்க...

தனி வீடு பற்றி
கனவு காணுவோர்
எவரும்
மொட்டை மாடி பற்றி
சிந்தித்ததுண்டா?

sky, clouds, sunset
பரந்து விரிந்த வானத்தையும்
காலையில் உதிக்கும் ஆதவனையும்
இரவில் தோன்றும் அம்புலியையும்
மின்மினியாய்ப் பளபளக்கும் விண்மீன்களையும்
தரிசிக்க,
வேண்டிப் பெற்ற வரம்  மொட்டை மாடி..!


இயந்திர வாழ்வின் இச்சையில்
உழன்று
காலக் கணினியின் மாயையில்
சிக்கித் தொலைந்த போது
மறந்து போன வரங்களுள் ஒன்று  மொட்டை மாடி..!

Moon, Half moon
காணி நிலமும் தென்னைமரமும்
மாடமாளிகையுடன் கேணிநீரும்
வேண்டிய 
பாட்டனார்  பாரதியே!
மொட்டை மாடியை
வேண்ட
மறந்ததேனோ..?!
 
இன்று....

ஊரடங்கின் உளைச்சலில்
சிறையுண்டு சிக்கிநின்ற வேளை
சுதந்திரக் காற்றை சுவாசிக்க
எமைத் தாங்கி நிற்கும்  தோழியாய்...


போக்கிடமற்று தூக்கம் தொலைத்து
அழுத்தம் ஏற்பட்ட வேளை
மனச்சோர்வு நீக்கும் நண்பனாய்...

ஆலயங்களும், பூங்காக்களும்
அகலமான தெருக்களும்
பூட்டப்பட்ட
இந்நாட்களில்
இருகை அணைத்து ஆரத்தழுவும்
அன்னையாய்...

ஆனது மொட்டைமாடி..!

Stars, Milky way galaxy, Universe, Night sky
உணவகத்திற்குச் சென்று உணவருந்த 
முடியா
நாங்கள் இங்கே அமர்ந்து நிலாச்சோறு
உண்கிறோம்.

வீதியில் சென்று நடைபயில
முடியா
நாங்கள் இங்கே நடந்து  உடற்பயிற்சி
பெறுகிறோம்.

வெளியுலகு சென்று மானுடம் 
காணா
நாங்கள் இங்கே நின்று தேவர்களை 
வணங்குகிறோம்.

"சொந்த ஆகாயம் வேண்டும்" 
என்ற
வைரக்கவியின் சொற்களுக்கு
இன்று
புது அர்த்தம் கற்பிக்கிறது
மொட்டை மாடி..!

நன்றி - ஆதிபகவன் (நிழற்படங்கள்)

Comments

  1. Very true Uma..Every day we walk for an hour on d terrace and after dinner we jus lie down gazing at the beauty of the night sky n come down only after 10.30 ..Well written ..Keep rocking..

    ReplyDelete
  2. Very true. Now only we are using our mottaimadi. Nice to share. Super pics.

    ReplyDelete
  3. Wonderful. Beautifully articulated.

    ReplyDelete
  4. Absolutely true. Beautiful lines with amazing pictures!

    ReplyDelete
  5. Very true Uma Mam, didnt realise we are utilising and benefiting so much from "mottai madi" , and Adhi's pictures .
    ...fantastic

    ReplyDelete
  6. நிதர்சனமான உண்மை mam. மொட்டைமாடி வெற்றிடத்திலும் உங்களது சிந்தனை சிதறல்கள் மற்றும் தங்கள் மகன் புகைப்படங்கள் அத்தனையும் மிக அருமை. வாழ்த்துக்கள் mam.

    ReplyDelete
  7. மொட்டைமாடியில் நிலாச்சோறு, இந்த நூற்றாண்டின் பிள்ளைகள் அறியா ஒரு விடயம், அனுபவத்தவருக்கு மட்டுமே அந்த ஆனந்தம் புரியும். மலரும் நினைவுகளுக்கு நன்றி 🙋🙏👏

    ReplyDelete
  8. Yes மொட்டை மாடி நம் வாழ்வின் ஒரு பகுதி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாய்மையைப் போற்றுதும்...! தாய்மையைப் போற்றுதும்...!

உதடுகளாலும் நினைவுகளாலும் என்றுமே என்னை ஆசிர்வதிக்கும் அம்மாவுக்கு இறைவன், தான் எல்லோரிடமும் அன்பு செய்யும் பொருட்டு தாயைப் படைத்தான்...!  படைக்கும் பிரமனுக்குச் சமமாகத் தாய் என்பவள் போற்றப்படக் காரணம், பெருவரமான  `தாய்மை`. தாயை மதித்துப் போற்றும் பண்பாலேயே பிறந்த நாட்டைத்  தாய்நாடு எனவும்,உதடுகள் இணைந்து ஒலிக்கும் முதல் மொழியைத் தாய்மொழி எனவும் கூறி பெருமிதம் கொள்கிறோம். சங்ககாலம் முதற் தொட்டு இக்காலம் வரை தாய்மையைப் பாடாத கவி  ஞ ர்களைத் தேடிக் கண்டெடுக்க வேண்டும்...! தாய்மையைப்  பேசவும் எழுதவும் எல்லை என்பதேது? எச்சூழ்நிலையிலும் வெறுக்காது நம்மை ஏற்றுக் கொள்ளும் தன்னலமில்லா அன்புகொண்டவள் அன்னை. ஐ ந்தறிவு கொண்ட உயிரினங்களும் பகுத்தறிவு பெறும்_  ``தாய்மை` என்ற பேறு கொள்ளும்போது...! தாயை இறைவனாகக்  காண்பது பொதுநிலை .அந்த இறைவனையே தாயாய் நினைத்து உள்ளம் உருகுதல் பெருநிலை .கருணையின் வடிவமான இறைவனையே,தாய்மை நிலைக்கு  அழைத்துச்  சென்று அவனையே தாய்மையை உணரச்  செய்வது, அனைத்துக்கும் அப்பாற்பட்ட வேறுநிலை . ...

வாய்க்காலும் பனைமரமும் உணர்த்தும் நட்பு...!

இரு உயிர்களுக்கு இடையே காணப்படும் ஒன்றுபட்ட, ஒத்த உணர்வும் எண்ணங்களும் ' நட்பு ' என்னும் சொல்லுக்குப் பாலமாய் அமைகின்றன. சங்ககால இலக்கிய மாந்தர்களான கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் அதியமான் - ஒளவையார் பாரி - கபிலர் ஆகியோர் அரசர்களுக்கும் புலவர்களுக்கும் இடையேயான மாசற்ற, இழிவற்ற, சுயநலமற்ற  நட்பினைப்  பறை சாற்றுவோராவர். ' ஒருவர்  பொறை இருவர் நட்பு ' எனக் கூறும் நாலடியார் நட்பின் அடிப்படைத் தன்மையாகப் ' பொறுத்தல் ' என்ற பண்பைக் குறிக்கிறது. நட்பு, நட்பாராய்தல், கூடாநட்பு, தீ நட்பு முதலியன பற்றி அறநூல்கள் பலவும் பலவிதமாக விளக்கினாலும், 'நாலடியார் 'கூறும் இவ்விரு பாடல்களும், இன்றைய வாழ்வியலோடு மிகவும் பொருத்தமானதாகவும், உளவியல் தன்மை கொண்டதாகவும் விளங்குகிறது. நாய்க்கால் சிறுவிரல் போல் நன் கணியாராயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்? சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும், செய்வினைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு.  (நாலடியார் 218) நாயின் காலில் இருக்கும் சிறிய விரல்களைப் போல, மிகுந்த நெருக்கம் உடையவராய்ப் பழகும் பலர், ஈயின் காலளவு கூட உதவி செய்யா ...

கல்விக்கு வழிகாட்டும் வள்ளுவம்...!

வெள்ளத்தால் போகாது வெந்தணலால் வேகாது வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது  கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது கள்ளர்கோ மிக அரிது காவலோ மிக எளிது கல்வி என்னும் உள்ளத்தே பொருளிருக்க உலகெலாம் பொருள் தேடி உழல்வதேனோ...!  - விவேக சிந்தாமணி திருக்குறள் என்பது அறநூல்களின் அறிவுச்சுரங்கம். அந்த அறிவுச்சுரங்கத்தில் காணக்கிடக்கும் அதிகாரங்கள் பற்பல. கல்வி,கல்லாமை,கேள்வி,அறிவுடைமை போன்ற அதிகாரங்கள் அனைத்துமே கல்வியின் தொடர்புடையதாய் இருப்பினும் 'கல்வி' என்ற அதிகாரத்தில் கூறப்பட்ட வள்ளுவத்தின் வழிகாட்டலைக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம். இரண்டடி குறள் வெண்பாவால் ஆன திருக்குறளில், அந்தந்த காலத்திற்கேற்ற செய்திகள் வழிகாட்டுதல்கள் ஆகியவை நிரம்பி வழிகின்றன. 'கண்டதைப் படிக்கப் பண்டிதன் ஆவான்' என்ற சொல்வழக்கு ஒன்று உண்டு. 'கண்டு அதைப் படிக்கப் படிக்கப் பண்டிதன் ஆவான்' என்பதே சரி. கண்ட நூல்களை எல்லாம் கற்பதால் பயனில்லை. பாகுபாடு அறிந்து கற்கத் தகுந்த நூல்களைக் கற்பதால் மட்டுமே அறிவு வளர்ச்சி பெறும். இல்லையானால் காலமும் முயற்சியும் வீணாகும். அப்படித் தேர்ந்தெடுத்துப் படிக்கும் நூல்களை...