Skip to main content

‘விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்’

hindu-famous-god-vinayaka-HQ-pictures-of-lord-ganapathi02-naveengfx.com
விநாயகரின் அவதாரத் திருநாளாகிய ஒவ்வொரு விநாயகச் சதுர்த்தி அன்றும் பூமாலையால் பூஜிக்கும் அருளை அளிக்கும்  என் ஐயன் இம்முறை பாமாலையாலும் அவரை வழிபடும் வரத்தை அருளி இருக்கிறார். ‘அவனருளால் அவன் தாள் வணங்கி’ தமிழின் முதல் எழுத்துகளாம் ‘உயிர்’ எழுத்துகளால் தொடங்கும் 108 போற்றிகளை இனிய தமிழில் இயற்றியுள்ளேன். ஓம்கார ரூபனாய் ஐயன் விளங்குவதால் ப்ரணவத்தையும் இணைத்துள்ளேன்.

மங்கலம் பொங்கும் இந்நன்னாளில் பாலுடன் தெளிதேனையும் பாகு பருப்புடன் அளித்து சங்கத்தமிழை வரமாகக் கேட்ட ஒளவை பெருமாட்டியின் ‘விநாயகர் அகவலுடன்’ அடியேன் இயற்றிய 108 போற்றிகளையும் பாடி,எருக்காலும் அருகாலும் அய்யனை வழிபாடு  செய்து அவனருள் பெற்று இன்புற வேண்டுகிறேன்.

சூழ்கலி போக்கி ஒளியை வழங்குவான் நம் செல்லப் பிள்ளை.

‘விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்’

விநாயகர் போற்றி!

ஓம் அகரமாய் எழுந்தாய் போற்றி !

ஓம் அன்பாய் மலர்ந்தாய் போற்றி!

ஓம் அறிவாய் ஒளிர்வாய் போற்றி!

ஓம் அப்பனாய் ஆனாய் போற்றி!

ஓம் அருகம்புல் அணிவாய் போற்றி!

ஓம் அன்னையின் செல்வமே போற்றி!

ஓம் அளவிலாக் கருணையே போற்றி!

ஓம் அள்ளித்தரும் வள்ளலே போற்றி!

ஓம் அகலிடம் ஆனாய் போற்றி!

ஓம் ஆவணி நாயகா போற்றி!

 

ஓம் ஆனந்த வடிவே போற்றி!

ஓம் ஆதி பகவனே போற்றி!

ஓம் ஆறுமுகன் அண்ணா போற்றி!

ஓம் ஆலம்பம் அளிப்பாய் போற்றி!

ஓம் ஆனைமா முகனே போற்றி!

ஓம் ஆதிரையான் மகனே போற்றி!

ஓம் ஆலத்தில் உதித்தாய் போற்றி!

ஓம் ஆலவாய் அணிந்தோய் போற்றி!

ஓம் ஆலமர் புதல்வா போற்றி!

ஓம் ஆர்வலர் அன்பனே போற்றி!

 

ஓம் இருசுடர் அணிந்தோய் போற்றி!

ஓம் இமயவல்லி மைந்தா போற்றி!

ஓம் ஈறைவர்க்கு இயவுள் போற்றி!

ஓம் இலைதழை ஏற்பாய் போற்றி!

ஓம் இசைத்தமிழ் ஏற்பாய் போற்றி!

ஓம் இம்மையில் காப்பாய் போற்றி!

ஓம் இருவினை அகற்றுவோய் போற்றி!

ஓம் இங்கண் இருப்பாய் போற்றி!

ஓம் இடையூறு அகற்றுவாய் போற்றி!

ஓம் இந்திரியம் அடக்கினோய் போற்றி!

 

ஓம் ஈந்து மகிழ்வாய் போற்றி!

ஓம் ஈகம் கமழ்வாய் போற்றி!

ஓம் ஈனில் இல்லாய் போற்றி!

ஓம் ஈஸ்வரி மைந்தா போற்றி!

ஓம் ஈன்றார் பெருமையே போற்றி!

ஓம் ஈட்டம் அளிப்பாய் போற்றி!

ஓம் ஈடினை இல்லாய் போற்றி!

ஓம் ஈசனின் மகனே போற்றி!

ஓம் ஈடேற்றி விடுவாய் போற்றி!

ஓம் உகப்பு தருவாய் போற்றி!

 

ஓம் உகவை அளிப்பாய் போற்றி!

ஓம் உண்மையில் உறைந்தோய் போற்றி!

ஓம் உழைப்பார்க்கு நல்லாய் போற்றி!

ஓம் உளவியல் அறிந்தோய் போற்றி!

ஓம் உச்சியப்பனே போற்றி!

ஓம் உத்தி அறிந்தோய் போற்றி!

ஓம் உந்துரு வாகனா போற்றி!

ஓம் உந்மத்தம் அழிப்பாய் போற்றி!

ஓம் உமாபதி மைந்தா போற்றி!

ஓம் உம்பர் கோமானே போற்றி!

 

ஓம் உபசரித்தல் மகிழ்வாய் போற்றி!

ஓம் உரகம் அணிந்தோய் போற்றி!

ஓம் உழப்பு தீர்ப்பாய் போற்றி!

ஓம் உவாமதி அன்னாய் போற்றி!

 ஓம் உவனாய்  நிற்பாய்  போற்றி!

ஓம் ஊக்கவர் துணையாய் போற்றி!

ஓம் ஊதம் தலைவா போற்றி!

ஓம் ஊறுபாடு நீக்குவாய் போற்றி!

ஓம் ஊற்றம் அளிப்பாய் போற்றி!

ஓம் ஊன்கணார் துணையே போற்றி!

 

ஓம் ஊனம் அழிப்பாய் போற்றி!

ஓம் ஊதியம் தருவாய் போற்றி!

ஓம் ஊட்டம் அளிப்பாய் போற்றி!

ஓம் ஊக்கம் தருவாய் போற்றி!

ஓம் ஊமத்தம் அணிவாய் போற்றி!

ஓம் ஊழ்வினை அழிப்பாய் போற்றி!

ஓம் எல்லையில்லா வள்ளலே போற்றி!

ஓம் எக்கியம் களிப்பாய் போற்றி!

ஓம் எண்குணன் செல்வனே போற்றி!

ஓம் எஞ்ஞான்றும் காப்போய் போற்றி!

 

ஓம் எதிர்மை அறிவோம் போற்றி!

ஓம் எம்பெருமான் மகனே போற்றி!

ஓம் எம்மை துணையாய் போற்றி!

ஓம் எருக்கு அணிவோய் போற்றி!

ஓம் எல்லார் முதல்வனே போற்றி!

ஓம் எலியூரும் வாகனா போற்றி!

ஓம் எய்ப்பு நீக்குவோய் போற்றி!

ஓம் எங்கணும் இருப்பாய் போற்றி!

ஓம் எளிமையின் உறைவே போற்றி!

ஓம் ஏகதந்தனே போற்றி!

 

ஓம் ஏகம்பர் மகனே போற்றி!

ஓம் ஏதம் நீக்குவோய் போற்றி!

ஓம் ஏவாப்பு தீர்ப்பாய் போற்றி!

ஓம் ஏழைக்கிரங்குவோய் போற்றி!

ஓம் ஏற்றம் அளிப்பாய் போற்றி!

ஓம் ஏரண்டத் தலைவா போற்றி!

ஓம் ஏக சக்ரவர்த்தியே போற்றி!

ஓம் ஐம்முகன் மகனே போற்றி!

ஓம் ஐங்கர நாயகா போற்றி!

ஓம் ஐயை புதல்வா போற்றி!

 

ஓம் ஐவளம் தருவாய் போற்றி!

ஓம் ஐந்தெழுத்து உணர்த்துவாய் போற்றி!

ஓம் ஐஐக்கு ஐயா போற்றி!

ஓம் ஐயம் நீக்குவாய் போற்றி!

ஓம் ஐராவதம் போன்றோய் போற்றி!

ஓம் ஒளி தரும் வதனா போற்றி!

ஓம் ஒட்டலர் நீக்குவாய் போற்றி!

ஓம் ஒடுக்குதல் உணர்த்துவாய் போற்றி!

ஓம் ஒஃகுதல் இல்லாய் போற்றி!

ஓம் ஒன்றுநர் ஆனாய் போற்றி!

 

ஓம் ஒள்வளம் சேர்ப்பாய் போற்றி!

ஓம் ஒற்றைக் கொம்பு நாயகா போற்றி!

ஓம் ஓம்கார ரூபனே போற்றி!

ஓம் ஓங்கார முதலே போற்றி!

ஓம் ஓசம் தருவாய் போற்றி!

ஓம் ஒளவியம் நீக்குவோய் போற்றி!

ஓம் ஒளடதம் களைவாய் போற்றி!

ஓம் ஒளவைக்கு அருளினோய் போற்றி!

 

ஓம் ராஜாதி ராஜனே போற்றி போற்றி!!!

 அகராதி

அகலிடம் _ உலகம்

ஆவலிப்பு – கர்வம்

ஆலம்பம் – அடைக்கலம்

ஆலம் – மஞ்சள்

ஆலவாய் – பாம்பு

ஆலமர்  - ஆலமரத்தின் கீழ் அமர்ந்த சிவன்

இயவுள் – தலைவன்

ஈகம் – சந்தனம்

ஈனில் – கரு உயிர்க்கும் இடம்

ஈட்டம் – வளமை

உஞற்று – முயற்சி

உகப்பு _ உயர்வு

உகவை  - மகிழ்ச்சி

உவன் – பின்னும் முன்னும் நிற்பவன்

உந்துரு – எலி

உந்மத்தம் – மயக்கம்

உழப்பு – குழப்பம்

உம்பர் – வானோர்

உரகம் – பாம்பு

உவாமதி – முழுநிலா

ஊதம் – யானைக்கூட்டம்

ஊற்றம் - வலிமை

ஊன்கணார் – மானிடர்

ஊமத்தம் – ஒரு வகை பூ

எக்கியம் – யாகம் / வேள்வி

எண்குணன்  - எட்டு குணங்களை உடைய சிவன்

எதிர்மை – எதிர்காலத்தில் நிகழ்தல்

எய்ப்பு - வறுமை

ஏதம் – குற்றம் / நோய்

ஏவாப்பு – துன்பம்

ஏரண்டம் – பேரண்டம்

ஐம்முகன் – சிவன்

ஐயை - துர்கை

ஒடுக்குதல் - அடக்குதல்

ஒஃகுதல் – பின்வாங்குதல்

ஒன்றுநர் - நண்பன்

ஒள்வளம்- அறிவு / அழகு

ஓசம் – கீர்த்தி

ஒளவியம் - பொறாமை

ஒளடதம் - மருந்து

                                                      *********************

Comments

  1. Awesome write up! ����

    ReplyDelete
  2. As usual , super Miss 🤩✨💟

    ReplyDelete
  3. மிக அருமையான பதிவு mam.108 போற்றிகளுக்கான அகராதி விளக்கங்களும் மிக மிக அருமை mam. இந்த வருட விநாயகச் சதுர்த்தி அன்று உங்களது விநாயகர் போற்றியோடு இனிதே துவங்குகிறேன்.

    ReplyDelete
  4. Very nice ����

    ReplyDelete
  5. Excellent Uma..Very appropriate slokas..You have also given the meanings to understand the slogans.
    Looking forward to more and more from you.

    ReplyDelete
  6. Soooperb dear
    Excellent sloka
    Awesome dear with meanings
    sooo.... divine

    ReplyDelete
  7. Expecting more from u dear
    Keep rocking 👍

    ReplyDelete
  8. Very simple and nice sloka.👌
    Meaning given at the end of the sloka is fabulous idea.👍
    Kudos .💐..to mam.

    ReplyDelete
  9. Excellent and great effort. Meaning given at the end will make us understand it better. Chanting the Slokas knowing it's meaning will really give satisfaction. 👏👏

    ReplyDelete
  10. Superb no words to say.Excellent.defenetly on I will recetate this slogan only .

    ReplyDelete
  11. உயிர் எழுத்தை முதலாக வைத்து விநாயகர் போற்றி பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளீர்கள்
    உங்களது படைப்புகள் மேன்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. அருமையான விளக்கவுரையுடன் கூடிய விநாயகர் அகவல். கண்டதும் களிப்புற்றேன். வாழ்த்துக்கள் 🙏🙏🙏

    ReplyDelete
  13. மிக்க அருமை, வாழ்க வளமுடன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாய்மையைப் போற்றுதும்...! தாய்மையைப் போற்றுதும்...!

உதடுகளாலும் நினைவுகளாலும் என்றுமே என்னை ஆசிர்வதிக்கும் அம்மாவுக்கு இறைவன், தான் எல்லோரிடமும் அன்பு செய்யும் பொருட்டு தாயைப் படைத்தான்...!  படைக்கும் பிரமனுக்குச் சமமாகத் தாய் என்பவள் போற்றப்படக் காரணம், பெருவரமான  `தாய்மை`. தாயை மதித்துப் போற்றும் பண்பாலேயே பிறந்த நாட்டைத்  தாய்நாடு எனவும்,உதடுகள் இணைந்து ஒலிக்கும் முதல் மொழியைத் தாய்மொழி எனவும் கூறி பெருமிதம் கொள்கிறோம். சங்ககாலம் முதற் தொட்டு இக்காலம் வரை தாய்மையைப் பாடாத கவி  ஞ ர்களைத் தேடிக் கண்டெடுக்க வேண்டும்...! தாய்மையைப்  பேசவும் எழுதவும் எல்லை என்பதேது? எச்சூழ்நிலையிலும் வெறுக்காது நம்மை ஏற்றுக் கொள்ளும் தன்னலமில்லா அன்புகொண்டவள் அன்னை. ஐ ந்தறிவு கொண்ட உயிரினங்களும் பகுத்தறிவு பெறும்_  ``தாய்மை` என்ற பேறு கொள்ளும்போது...! தாயை இறைவனாகக்  காண்பது பொதுநிலை .அந்த இறைவனையே தாயாய் நினைத்து உள்ளம் உருகுதல் பெருநிலை .கருணையின் வடிவமான இறைவனையே,தாய்மை நிலைக்கு  அழைத்துச்  சென்று அவனையே தாய்மையை உணரச்  செய்வது, அனைத்துக்கும் அப்பாற்பட்ட வேறுநிலை . ...

வாய்க்காலும் பனைமரமும் உணர்த்தும் நட்பு...!

இரு உயிர்களுக்கு இடையே காணப்படும் ஒன்றுபட்ட, ஒத்த உணர்வும் எண்ணங்களும் ' நட்பு ' என்னும் சொல்லுக்குப் பாலமாய் அமைகின்றன. சங்ககால இலக்கிய மாந்தர்களான கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் அதியமான் - ஒளவையார் பாரி - கபிலர் ஆகியோர் அரசர்களுக்கும் புலவர்களுக்கும் இடையேயான மாசற்ற, இழிவற்ற, சுயநலமற்ற  நட்பினைப்  பறை சாற்றுவோராவர். ' ஒருவர்  பொறை இருவர் நட்பு ' எனக் கூறும் நாலடியார் நட்பின் அடிப்படைத் தன்மையாகப் ' பொறுத்தல் ' என்ற பண்பைக் குறிக்கிறது. நட்பு, நட்பாராய்தல், கூடாநட்பு, தீ நட்பு முதலியன பற்றி அறநூல்கள் பலவும் பலவிதமாக விளக்கினாலும், 'நாலடியார் 'கூறும் இவ்விரு பாடல்களும், இன்றைய வாழ்வியலோடு மிகவும் பொருத்தமானதாகவும், உளவியல் தன்மை கொண்டதாகவும் விளங்குகிறது. நாய்க்கால் சிறுவிரல் போல் நன் கணியாராயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்? சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும், செய்வினைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு.  (நாலடியார் 218) நாயின் காலில் இருக்கும் சிறிய விரல்களைப் போல, மிகுந்த நெருக்கம் உடையவராய்ப் பழகும் பலர், ஈயின் காலளவு கூட உதவி செய்யா ...

கல்விக்கு வழிகாட்டும் வள்ளுவம்...!

வெள்ளத்தால் போகாது வெந்தணலால் வேகாது வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது  கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது கள்ளர்கோ மிக அரிது காவலோ மிக எளிது கல்வி என்னும் உள்ளத்தே பொருளிருக்க உலகெலாம் பொருள் தேடி உழல்வதேனோ...!  - விவேக சிந்தாமணி திருக்குறள் என்பது அறநூல்களின் அறிவுச்சுரங்கம். அந்த அறிவுச்சுரங்கத்தில் காணக்கிடக்கும் அதிகாரங்கள் பற்பல. கல்வி,கல்லாமை,கேள்வி,அறிவுடைமை போன்ற அதிகாரங்கள் அனைத்துமே கல்வியின் தொடர்புடையதாய் இருப்பினும் 'கல்வி' என்ற அதிகாரத்தில் கூறப்பட்ட வள்ளுவத்தின் வழிகாட்டலைக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம். இரண்டடி குறள் வெண்பாவால் ஆன திருக்குறளில், அந்தந்த காலத்திற்கேற்ற செய்திகள் வழிகாட்டுதல்கள் ஆகியவை நிரம்பி வழிகின்றன. 'கண்டதைப் படிக்கப் பண்டிதன் ஆவான்' என்ற சொல்வழக்கு ஒன்று உண்டு. 'கண்டு அதைப் படிக்கப் படிக்கப் பண்டிதன் ஆவான்' என்பதே சரி. கண்ட நூல்களை எல்லாம் கற்பதால் பயனில்லை. பாகுபாடு அறிந்து கற்கத் தகுந்த நூல்களைக் கற்பதால் மட்டுமே அறிவு வளர்ச்சி பெறும். இல்லையானால் காலமும் முயற்சியும் வீணாகும். அப்படித் தேர்ந்தெடுத்துப் படிக்கும் நூல்களை...